தம்பதியர்கள் [ கணவன் & மனைவி ] இடையே குழந்தை பாக்கியம் தடைக்கான காரணங்கள் என்ன ?
- ஒருவரது ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாம் இடம் குழந்தை பாக்கியம் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய ஸ்தானம். புத்திரத்திற்கு காரகனாக குறிப்பிடப் படுபவர் குரு. ஐந்தாம் பாவமும் குரு பாவமும் பலம் பெற்றிருந்தால் குழந்தைப் பேறு உண்டு. ஐந்தாம் இடம் + குரு – பலவீனமாக இருந்தால் குழந்தைப் பேறு அமைவதில் தடை / தாமதம் ஏற்படுகின்றது. பலவீனம் என்றால் …
- லக்னத்திற்கு ஐந்தாம் இடத்து அதிபதி நீச்சம் அடைவது.
- ஐந்தாமிடத்து அதிபதி மறைவு ஸ்தானங்களில் [ 3,6,8,12 ] & பாதகஸ்தானங்களில் இருப்பது.
- ஐந்தாம் இடத்து அதிபதி சனி அல்லது சர்ப்ப கிரகங்களுடன் அல்லது சர்ப்பங்களின் [ ராகு / கேது ] நட்சத்திர சாரத்தில் இருப்பது.
- ஐந்தாம் இடத்து அதிபதி சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடைவது
- ஐந்தாம் இடத்து அதிபதி லக்னாதிபதி அல்லது ஏழாம் இடத்து அதிபதியுடன் சேர்க்கை பெறுதல்
- ஐந்தாம் இடத்து அதிபதி தன் ஆட்சி அல்லது உச்ச வீட்டில் வக்கிரம் பெறுவது
- ஐந்தாம் இடத்து அதிபதியுடன் செவ்வாய், சனி, இராகு, கேது, புதன் போன்ற கிரகங்களுடன் தனித்து / சேர்ந்திருந்தாலும்
- புத்திர காரகனான குரு பகவான் நீச்சம் பெற்றிருந்தாலும்
- புத்திரகாரகன் குரு, ஸுரியனுடன் அஸ்தங்கம் அடைந்தாலும்,
- புத்திர காரகன் தன் ஆட்சி / உச்ச வீட்டில் வக்கிரம் அடைந்தாலும்
- புத்திர காரகன் லக்னாதிபதியின் நட்சத்திர சாரம் பெற்றிருந்தாலும்
- புத்திர காரகன் பாதக அதிபதியின் நட்சத்திர சாரம் பெற்றிருந்தாலும்
- ஐந்தாம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு மறைவு ஸ்தானங்களில் மறைந்தாலும்,
- தோஷமுள்ள ஜாதகத்திற்கு தோஷமில்லா ஜாதகத்தை இணைப்பது போன்ற காரணங்களாலும் குழந்தை பாக்கியம் தடை ஏற்படுகின்றது.
சிறப்பு ஆலய வழிபாட்டிற்கு
- திருக்கருகாவூர் ஆலய வழிபாடு [ தஞ்சாவூர் – கும்பகோணம் செல்லும் சாலையில் பாப நாசத்திலிருந்து தெற்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது ]
- கருவளர்சேர் . மருதா நல்லூர் [ கும்ப கோணம் அருகே மருதா நல்லூர் அருகில் கருவளர்சேரி – அம்பாள் சக்க்ர மேரு வுடன் சுயம்பு அகிலாண்டேஸ்வரி – பெண்களுக்கு திருமணம் ஆகவும், அவர்களுக்கு கரு நல்ல முறையில் ஏற்படவும் அருள் பாலிக்கின்றார். முக தரிசனம் மட்டுமே கிட்டும். உடல் முழுவதும் திரை மறைவில் இருக்கும். நவராத்திரி ஒன்பது நாள் + சிவராத்திரி ஒரு நாள் மட்டும் முழு தரிசனம் கிட்டும். குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும் அதிக சக்தி வாய்ந்த கோயில்.
- சென்னை – முகப்பேறு
- திருவாலங்காடு நரசிங்கம்பேட்டை – கும்பகோணம் – மயிலாடு துறை சாலையில் குத்தாலத்திற்கு தென்மேற்கில் அமைந்துள்ளது.வட ஆரண்யேஸ்வரர் , வண்டார் குழலி அம்மன் – புத்திரகாமேஸ்வரர் தீர்த்தம் உள்ள தலம்.